சோதனை சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கண்டிப்பாக ஆவணக்கள் வைத்திருக்க வேண்டும் …!நெல்லை ஆட்சியர் உத்தரவு

சோதனை சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கண்டிப்பாக உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறைகளில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து நெல்லை புளியகரை வழியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் பொருட்களை கடும் கட்டுப்பாடுகள் விதித்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட  உத்தரவில்,சோதனை சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கண்டிப்பாக உள்ளாட்சித்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறைகளில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.  மருத்துவ கழிவுகளை எக்காரணத்தை கொண்டும் தமிழக எல்லைக்குள் கொண்டு வரக்கூடாது  என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment