அப்போலோ மருத்துவமனையில் இருந்து வசந்தகுமாரின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து எம்.பி வசந்தகுமாரின் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ஆம் தேதி கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவரின் மறைவிற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

வசந்தகுமார் மறைவை தொடர்ந்து வசந்தகுமாருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. வசந்தகுமார் எம்.பி உடல் சென்னை தி.நகர் நடராஜன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

அப்போலோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு ஆம்புலன்சில் மூலம் உடல் கொண்டு செல்லப்படுகிறது. காலை 10.30  மணி வரை பொது மக்கள் அஞ்சலிக்கு வசந்தகுமார் எம்பி உடல் அவரது வீட்டில் வைக்கப்படுகிறது.

பின்னர், காலை 10.30 மணிக்கு மேல் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு மேல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செயல்படுகிறது. நாளை காலை 10 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

author avatar
murugan