வசந்தகுமார் எம்.பி.யின் உடல் பொற்றோர் சமாதி அருகிலேயே நல்லடக்கம்

மறைந்த வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி தொகுதி எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த H.வசந்தகுமார் கடந்த 10-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில்,   சிகிக்சை பலனின்றி H.வசந்தகுமார் உயிரிழந்தார்.

வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை  தெரிவித்தனர். மறைந்த வசந்தகுமாரின் உடல்  சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.அங்கு பொதுமக்கள்,அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் வசந்தகுமாரின் உடல் அகஸ்தீஸ்வரத்தில் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பொற்றோர் சமாதி அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.