கதாநாயகியாக களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார் புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில், பீட்டர்பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், பீட்டர் பால் குடிப் பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக கூறி, இணையத்தில் கண்ணீர்விட்டு வீடியோக்களை பதிவிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து பீட்டர்பாலை விட்டு வனிதா விலக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். 1995-இல் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம், இவர் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும், அப்படங்கள் ஹிட் ஆகவில்லை.

அதன்பின் திருமணம் செய்து கொண்ட இவர், படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது இவர் புதிய படமொன்றில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ள நிலையில், இப்படத்திற்கு அனல்காற்று என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக வனிதா விஜயகுமார் தனது உடல் எடையை குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.