வைகாசி விசாகம்… தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு.!

வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் ஜூன் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இந்த வைகாசி விசாக திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் நடந்தே கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 2 ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
Muthu Kumar