நான் வெப் சீரிஸில் நடிக்க தயாராக உள்ளேன்…வைகை புயல்.!

நான் வெப் சீரிஸில் நடிக்க தயாராக உள்ளேன், ஆனால் நான் எந்த வெப் சீரிஸ்லும் கையெழுத்திடவில்லை

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார். அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக  பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் இவர் ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க போவதாகவும், அதனை  அவருடன் பணியாற்றிய ஒருவர் இயக்கவுள்ளதாகவும் , கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. 

இதற்கு வடிவேலு தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் வடிவேலுவிடம் பேட்டி ஒன்றில் கேட்கையில், நான் வெப் சீரிஸில் நடிக்க தயாராக உள்ளேன், ஆனால் நான் எந்த வெப் சீரிஸ்லும் கையெழுத்திடவில்லை என்றும், கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தை தவிர எந்த இணையதள தொடரிலும் கையெழுத்திடவில்லை என்று கூறியுள்ளார்.