12-17 வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசி பலனளிக்கிறது – அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!

12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கும் தங்களது தடுப்பூசி வேலை செய்வதாக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக முக கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றி சுத்தமாக இருப்பதையும் கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், தற்போது கொரோனாவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான் என கூறப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதிலும் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி மக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட வேண்டும் என்பதால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதிலேயே தடுப்பூசி தட்டுப்பாடு அதிகம் ஏற்படுகிறது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒப்புதலை இந்த மாத தொடக்கத்தில் வழங்கியது. அதன்படி இரு நாடுகளிலுமே 12 வயது சிறுவர்களுக்கு பைசர் மற்றும் பயோந்டெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்களது தடுப்பூசியும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களிடம் வேலை செய்வதாக அறிவித்துள்ளது. அதாவது 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 3700 சிறுவர்கள் நடத்தப்பட்ட முதல்கட்ட பரிசோதனையில் தங்களது தடுப்பூசி சிறுவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் பிற உலகளாவிய கட்டுப்பாடுகளுக்கு அடுத்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Rebekal

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

2 hours ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

9 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

11 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

13 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

14 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

14 hours ago