தடுப்பூசி திருவிழா என்கின்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது…! – ராகுல்காந்தி

தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு  வந்தாலும்,கொரோனா வைரஸின் 2-வது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்த  அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள்,  தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த  பதிவில்,’தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுவதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகள். வெண்டிலேட்டர், ஆக்சிஜன், தடுப்பூசிகள் இருப்பில் இல்லை  என்றும்,மக்களிடம் பெறப்பட்ட பி.எம்.கேர் நிதி என்ன ஆனது? என்றும் கேள்வி  எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.