என்னை பிடித்த ஏழரை சனி விட்டுவிட்டது : நடிகரின் பேச்சால் அதிர்ந்த சீரியல் குழு

சன்டிவியில் நீண்ட வருடமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வாணி ராணி’ இந்த சீரியலில் நடிகை ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துவருகிறார். இதில் ப்ரித்விராஜ் என்ற நடிகரும் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடியபோகிறது. இதனை பற்றி அந்த நடிகர் கூறுகையில் ‘என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி முடிந்தது. அந்த சீரியலில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதனை நடிகைதான் கண்டுபிடிப்பார்கள். அதற்க்கு ஏன் எங்களை டம்மியாக காட்டுகிறார் என தெரியவில்லை. அந்த சீரியல் இயக்குனருக்கு வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை எப்போது பார்த்தாலும் எங்களுக்கு அழுகை சீனாக கொடுக்கிறார்.’ என கூறி சீரியல் தரப்பினரை அதிர வைத்துள்ளார்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment