பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அதற்கு மறுப்பு தெரிவித்தால் 17 வயது சிறுமியின் மூக்கை வெட்டி 2 ஆண்கள் தப்பி ஓட்டம்.
உத்தராகண்டில் இரண்டு ஆண்கள் 17 வயது சிறுமியின் மூக்கை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்திருக்கிறது.
பாகேஸ்வர் மாவட்டம் கல்ப்ளிகேர் தெஹ்ஸில் ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவரும் ஒரே கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவர் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அந்த சிறுமி தவிர்த்ததால் அந்த சிறுமியின் மூக்கை வெட்டி வீட்டை விட்டு தப்பி ஓடினர்.
அதே நேரத்தில், அந்த பெண்ணின் பெற்றோரைத் தாக்கிய பின்னர் தங்க நகைகள் மற்றும் ரூ .20,000 மதிப்புள்ள பணத்தை திருடிச் சென்றனர். இதையடுத்து, சிறுமி மற்றும் அவரது பெற்றோர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, இது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளுக்கும் சென்றோம், ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். நாங்கள் வழக்கை விசாரித்து வருகிறோம், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.