உத்தரபிரதேச அமைச்சர் ‘Brajesh Pathak -க்கு’ கொரோன தொற்று உறுதி.!

உத்தரபிரதேச அமைச்சர் Brajesh Pathak க்கு கொரோனா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் பதக் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், “கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்குப் பிறகு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் பரிசோதிக்கப்பட்டேன். சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது . கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

நேற்று , உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று 1 லட்சத்தை தாண்டின, இறப்பு எண்ணிக்கை 1,817 ஆக உயர்ந்தது. ஏற்கனவே உத்தரபிரதே அமைச்சர் கமல் ராணி வருண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை 1,00,310 ஆக உள்ளது .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.