கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட தாய்க்கு,வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் கொடுத்த மகள்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது.இதனால்,அம்மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் போன்ற தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில்,உத்திரப்பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மற்றும் படுக்கை வசதி கிடைக்காமல் கடுமையான மூச்சுத்திணறலுடன் ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டிருந்த தாய்க்கு,அவரின் மகள்கள் வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் கொடுத்தனர்.இருப்பினும்,மூச்சுத்திணறல் சரியாகாததால் அவர்களின் தாய் உயிரிழந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு,உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு பெண் தனது கணவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் படுக்கை வசதி கிடைக்காததால்,வாயோடு வாய் வைத்து ஆக்சிஜன் அளித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Mobile Internet Speed Increase : போன் நெட்டை எப்படி வேகமாக மாற்றுவது என்பதற்கான டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போன் உபயோகம் செய்யும் போது…
Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த…
WHO : உலக சுகாதார நிறுவனம் தற்போது செவித்திறன் பாதிப்பு பற்றிய சில அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாம் பாட்டு கேட்பதற்கு பயன்படுத்தும் ஹெட்…
மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு…
Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…
TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…