யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு.! முதல் 4 இடங்களை கைப்பற்றிய பெண்கள்.!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடபட்டன. அதில் முதல் 4 இடங்களைபெண்கள் கைப்பற்றியுள்ளனர். 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடிமையியல் பணிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. முதற்கட்ட தேர்வு முடிந்து ஜூன் மாதமே முடிவுகள் வெளியாகின. இதனை அடுத்து, டிசம்பர் மாதம் முக்கிய தேர்வு முடிந்து, டிசம்பர் 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

இதனை அடுத்து, கடந்த மே 18ஆம் தேதி நேர்காணல் நடைபெற்றது. தற்போது இதற்கான மொத்த மதிப்பெண் பட்டியலும் வெளியாகியுள்ள்ளது.அதில், முதல் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த வருடம் 3 பெண்கள் முதல் 3 இடத்தை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 933 காலிப்பணியிண்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.