வரும் 20ம் திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டம் – துரை முருகன் அறிவிப்பு

திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி நடக்க உள்ளதாக துரை முருகன் அறிவிப்பு.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வரும் 20-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும் என்றும் அதுபோது, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் துரை முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்