யுனைடெட் ஏர்லைன்ஸ் 16,370 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  தொடர்ந்து விமானத்துறை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அக்டோபர் 1 ஆம் தேதி முதல்  16,370 பேரை பணி நீக்கம் செய்ய  தயாராகி வருவதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் யுனைடெட் ஏர்லைன்ஸ் பராமரிப்பு செலவிற்கும், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க அமெரிக்கா அரசிடம் 25 பில்லியன் டாலர் நிதியை வாங்கியது. இந்த நிதி ஊழியர்களுக்கு சம்பளம் போன்ற பிரச்சனைசரி செய்து வந்த நிலையில், அமெரிக்க அரசு கொடுத்த நிதி இம்மாதத்துடன் முடியயுள்ளது.

கடந்த  ஜூலை மாதம், 90,000 -க்கும் மேற்பட்ட ஊழியர்களில் 36,000 பேரின் வேலைகள் ஆபத்தில் இருப்பதாக விமான நிறுவனம் எச்சரித்திருந்தது. 30% விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், விமான நிறுவனம் ஒரு மாதத்திற்கு 5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வருமானத்தை  இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் 25 பில்லியன் டாலர்களை நிதியுதவி வழங்கவேண்டும் என யுனைடெட் ஏர்லைன்ஸ் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan