அல்வா குடுத்த அமைச்சர் நிர்மலா !…மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடங்கியது !

மத்திய அரசின்  பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா குடுக்கும் நிகழ்வு புதுடில்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார்.
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் நிதி பட்ஜெட் தயாரிக்கும் செய்யும் முன்பு அல்வா குடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.இந்திய கலாச்சாரம் படி எந்த ஒரு நல்ல விஷயம் தொடங்கும் முன்பு இனிப்பு வழங்கப்படும்.அதே போல், இந்த முறை புதிய அமைச்சரவை சார்பில் வரும் ஜூலை 5ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதிதுறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்.இந்த ஆண்டு முதல் முறையாக தாக்கல் செய்யப்போகிறார்.
இன்று தொடங்கிய பட்ஜெட் தயாரிப்பு கூட்டத்தில் சுமார் 100 அதிகாரிகள் வரை கலந்து கொண்டுள்ளனர்.