#India#ஐ.நாவில் அங்கிகாரம்-அறிக்கை அசத்தல்

ஜ.நா இறுதி செய்துள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா சபையின் 75வது ஆண்டு விழாக்காக இறுதி செய்யப்பட்ட தீர்மானத்தின் வரைவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஐ.நா சபை  எனப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக கடந்த மாதம் தேர்வாகிய இந்தியா வரும், 2021ம் ஆண்டு, ஜனவரியில் இருந்து,2 ஆண்டுகளுக்கு  உறுப்பினராக இருக்கும்.

இந்நிலையில் தான்  ஐ.நாவின், 75வது ஆண்டு விழாவானது, செப்டம்பர், 21ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையி விழாவில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானத்தின் வரைவு அறிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளது.

அவ்அறிக்கையை உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ள இந்த வரைவு அறிக்கையானது சர்வதேச பிரச்னைகள் குறித்தும், உறுப்பு நாடான இந்தியாவுக்கு உள்ள கவலைகள் மற்றும், அவற்றிற்கான தீர்வுகளை பிரதிபலிக்கின்ற வகையில், அமைந்துள்ளதாக ஐ.நா., வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து, ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர துாதராக உள்ள  டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில் ஐ.நா., சபையின், 75வது ஆண்டு விழாவிற்காக இறுதி செய்யப்பட்டுள்ள அறிக்கையை நாங்கள்  (இந்தியா) வரவேற்கிறோம்.

2021 முதல், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கொண்டு வர உள்ள முன்னுரிமைகள் அனைத்துமே இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்று கூறினார்

author avatar
kavitha