வடக்கு சிரியாவில் இரண்டு துருக்கிய வீரர்கள் உயிரிழப்பு – துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!!

வடக்கு சிரியாவில் 2 துருக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

துருக்கி ராணுவ கவச வாகனம் தாக்கப்பட்டு, இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் இரண்டு வீரர்களை காயமடைந்துள்ளனர் என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துருக்கி எல்லைக்கும் வடக்கு அலெப்போவிற்கும் இடையிலான ஒரு பகுதியை உள்ளடக்கிய யூப்ரடீஸ் ஷீல்ட் பகுதியில் நேற்று இந்த தாக்குதல் நடந்தாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘பயங்கரவாத’ இலக்குகளைத் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்று அமைச்சகம் கூறவில்லை, ஆனால், பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளது. துருக்கிக்குள் பல ஆண்டுகளாக கிளர்ச்சியை நடத்தி வரும் குர்திஷ் குழுவின் விரிவாக்கமாக இது கருதப்படுகிறது.

இதனிடையே, துருக்கியில் பல பயங்கர குண்டுவெடிப்புகளுக்கு பின்னர், இஸ்லாமிய அரசு குழுவை வெளியேற்றும் நோக்கத்துடன் தனது முதல் எல்லை தாண்டிய நடவடிக்கையை 2016ல் சிரியாவிற்கு அறிமுகப்படுத்தியது. இது ஆபரேஷன் யூப்ரடீஸ் ஷீல்ட் என்று அழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

மேலும், துருக்கி, வடக்கு சிரியாவில் மற்ற மூன்று நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்களில் பெரும்பாலோர் ஒய்.பி.ஜி பிரிவை சேர்ந்தவர்கள். ஐ.எஸ் உடன் போராடிய ஒரு பிரிவின் முதுகெலும்பாக அமைந்த சிரிய குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்க ஆதரவு அளிப்பதால் துருக்கி அரசு கோபமடைந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

சென்னையில் கள்ள ஒட்டு.? மீண்டும் வாக்குப்பதிவு நடத்தணும்.! தமிழிசை புகார்.!

Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…

41 seconds ago

மீண்டும் பறவை காய்ச்சல்.. தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…

2 mins ago

தேர்தல் விதிகளை மீறினாரா நடிகர் விஜய்? சென்னை போலீசில் பறந்தது புகார்.!

Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…

4 mins ago

வாக்குப்பெட்டியை பாதுகாக்கும் ஸ்ட்ராங் ரூம்… சுவாரஸ்ய தகவல்கள்…

Election2024: மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும்…

14 mins ago

பட்ஜெட் விலையில் 8ஜிபி ரேம்..6000mAh பேட்டரி..கலக்கும் சாம்சங் கேலக்ஸி F15 ஸ்மார்ட் போன்.!

Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…

51 mins ago

‘பவர்ப்ளேல விக்கெட் எடுக்க கத்துக்கணும்’- சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் !

Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…

1 hour ago