நடப்பு உலகக்கோப்பையில் ஒரே ரன்னில் அவுட் ஆன இரு அணியின் கேப்டன்கள் !

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதியது.இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட்டை இழந்து 307 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய  பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில்  அனைத்து விக்கெட்டை இழந்து 266 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக ஆரோன் பிஞ்ச் ,
களமிறங்கி ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாகவும் ,நிதானமாகவும்  விளையாடி 6 பவுண்டரி , 4 சிக்ஸர் என மொத்தமாக 82 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார்.
மேலும் கடந்த 09-ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியா எதிரான போட்டியில்  இந்திய அணியின் கேப்டன் கோலி 4 பவுண்டரி , 2 சிக்ஸர் என மொத்தமாக 82 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். இந்நிலையில்  நடப்பு உலகக்கோப்பையில் இரு அணி கேப்டன்களும் ஒரே ரன்னில் அவுட் ஆகி உள்ளனர்.

author avatar
murugan