இன்று டெல்லியில் சோனியா காந்தியை லாலு பிரசாத் யாதவும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களும் நேரில் சந்தித்து பேச உள்ளனர்.
பீகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஐக்கிய ஜனதா தளம் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. இதனையடுத்து கடந்த வாரம் பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் கவுன்சில் கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், 2024 தேர்தலில் பாஜகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்குவோம். ராகுல் காந்தி தனது யாத்திரை முடித்த பின்பு நிதிஷ்குமார் உடன் சென்று சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சந்திக்க இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் சோனியா காந்தியை லாலு பிரசாத் யாதவும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்களும் நேரில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.