இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.!

இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.!

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 2 தீவிரவாதிகள் எல்லைப்பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

பஞ்சாப் மாநிலம் அத்தாரி எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதற்கு தேடுதல் பணியில் ஈடுபட்ட வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்டது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊடுருவ முயன்ற 2 பேரை சுட்டுக்கொன்று துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்களை பறிமுதல் செய்தனர் எல்லை பாதுகாப்பு படையினர். மேலும் அப்பகுதிகளில் தேடுதல் பணியில் கூடுதல் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube