ஜார்கண்டில் இடி தாக்கி இருவர் உயிரிழப்பு – குழந்தை உட்பட 4 பேர் காயம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் இடி தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் காயமடைந்துள்ளனர். 

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா எனும் மாவட்டத்தில் நெல் வயலில் நின்று கொண்டிருந்த சிலர் மீது இடி தாக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு கைக்குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்தவர்கள் துர்கா சிங் மற்றும் அவரது மகள் புஷ்பா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இடி தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் உறுதி செய்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal