#BREAKING: தமிழக விமானி உள்பட 2 பேர் பலி.!

ஒடிஷா மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழக விமானி உட்பட 2 உயிரிழப்பு.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள தெங்கனல் மாவட்டத்தில் கங்கடஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரசால் ஏர்ஸ்ட்ரிப்பில் இன்று ஒரு பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பீகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சிப் குமார் ஜா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயிற்சி விமானியான அனிஸ் பாத்திமா ஆகிய இருவரும் உயிர் இழந்தனர்.

இவர்களின்  உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன விபத்துக்குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan