தொலைக்காட்சி நடிகர் வேணு அரவிந்துக்கு கோமா..!

பிரபல தொலைக்காட்சி நடிகர் வேணு அரவிந்துக்கு கோமா ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நடிகரான வேணு அரவிந்த், தனது நடிப்பால் பலரையும் கவர்ந்தவர். இவர் வாணி ராணி, அலைகள் போன்ற பிரபல நாடகங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். பின்பு அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. இதன் பிறகு அவரது மூளையில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இதனையடுத்து அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

இதன் காரணத்தால் இவரை தனியார் மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சையில் சேர்த்துள்ளனர். மேலும் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.