தூத்துக்குடி:திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தற்கொலை..!

தூத்துக்குடி:திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தற்கொலை..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொம்புத்துறையை சார்ந்தவர் அந்தோணி .இவர் மனைவி மரிய செல்வி இந்த தம்பதிக்கு 8 மகள்கள் , 4 மகன்கள் உள்ளனர்.இவர்களில் 6 மகளுக்கும் ,2 மகன்களும் திருமணம் முடிந்து விட்டது.
இதில் எட்டாவது பிள்ளை ஸ்டீபன் சுரேஷ் (36) மீனவரான இவருக்கு திருமணம் நடக்க வில்லை.இதனால் கடந்த சில நாள்களாக ஸ்டீபன் சுரேஷ் மனமுடைந்து இருந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்டீபன் சுரேஷ் தனது வீட்டில் அனைவரும்  தூங்கிய பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காலையில் தாய் மரிய செல்வி எழுந்து பார்த்த போது ஸ்டீபன் சுரேஷ் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்டீபன் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவ மணிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube