தூத்துக்குடியில் பயங்கரம் – திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை!

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை இன்று மாலை செய்யப்பட்டுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழுவில் உறுப்பினராக இருப்பவர். வி.எஸ். கருணாகரன். தூத்துக்குடி ஒன்றியத்தில் திமுக முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியில் இன்று மாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் எதற்க்காக படுகொலை செய்யப்பட்டார் , யார் படுகொலை செய்தது என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.