துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 100-ஐ எட்டியது!

துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 100-ஐ எட்டியது!

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியது.

துருக்கியில் உள்ள ஏகன்  தீவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, 7.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால், இஸ்மியர் நகரமே உருக்குலைந்த நிலையில் காணபடுகிறது.

அங்கு 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது.

மேலும், 1,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பொதுமக்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube