துருக்கி : உள்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா.! ஏற்க மறுக்கும் அதிபர்.!

கால அவகாசம் அளிக்காமல் ஊரடங்கு அமல்படுத்தியதற்கு பொறுப்பேற்று துருக்கி நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சாய்லு ராஜினாமா செய்துள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் போராடி கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

துருக்கியில் இதுவரை 56,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டுமே 4,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் நேற்று மட்டுமே 97 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக துருக்கியில் 1198 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

இதன் காரணமாக அந்நாட்டு அரசு, கால அவகாசம் இன்றி ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்கும் சூழல் நிலவியது. இதனால், அப்பகுதியில் சமூக தொற்று நிலவும் சூழல் உருவாகியுள்ளது. 

கால அவகாசம் அளிக்காமல் ஊரடங்கு அமல்படுத்தியதற்கு பொறுப்பேற்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சாய்லு ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை துருக்கி அதிபர் எர்டோகன் ஏற்க மறுத்து, மறு பரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சரிடம் கூறியுள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.