T.T.V.தினகரன் வீடு மற்றும் அலுவலகங்கள் என அவருக்கு சொந்தமான அணைத்து இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக T.T.V.தினகரனின் ஆதரவாளரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட M.L.A திரு தங்க தமிழ்ச்செல்வன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘இந்த வருமான வரி சோதனை கருப்புப்பணம் மீதான நடவடிக்கை என்றால், சேகர் ரெட்டி மீதான நடவடிக்கையில் சுணக்கம் காட்டுவது ஏன் ‘ என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் ‘சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியில் தெரிவித்தார்.
#என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினுள் நீதி மறையட்டுமே!!!