திருமணம் செய்ய மறுத்த 10ஆம் வகுப்பு மாணவி! சூடு வைத்து கொடுமைபடுத்திய கொடூர தாய்!

திருமணம் செய்ய மறுத்த 10ஆம் வகுப்பு மாணவி! சூடு வைத்து கொடுமைபடுத்திய கொடூர தாய்!

  • 10ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார் சேலத்தை சேர்ந்த தினேஷ் ரூபன். 
  • இதற்கு அந்த மாணவியும், மாணவியின் தந்தையும் மறுப்பு தெரிவிக்கவே, தாய் இதற்கு சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். 

சேலத்தில் கூலி வேலை செய்துவரும் ஒருவரின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை பார்த்து பிடித்துப்போய், தினேஷ் ரூபன் என்கிறவர் திருமணம் செய்ய மாணவியின் பெற்றோர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்த திருமண விஷயத்தில் பெண்ணின் தயார் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், மாணவியும், மாணவியின் தாயாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவியின் தயார், மாணவியை திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த மாணவி சம்மதிக்காததால், கோபத்தில் தாயார், அம்மாணவிக்கு கை, கால்களில் சூடு வைத்துள்ளார். தாயாரின் கொடுமையை பார்த்த அம்மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து, அந்த மாணவியின் தயார் மற்றும் தினேஷ் ரூபன் என இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube