அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா – சீனா வர்த்தகம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை முதல் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்று வருவதால் அவ்வப்போது சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரி அதிகரித்து கொண்டே சென்றது. இதனால் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி சீனாவில் அதிகரிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்காவும் உயர்த்தியது. இரண்டு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருவது லகப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்தது.
இந்த நிலையில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானில் நடைபெற்றது.இதில்  பல நாடுகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.அந்தவகையில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீனா அதிபர் ஸி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.இந்த  பேச்சுவார்த்தையில் அமெரிக்கா – சீனா வர்த்தகம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது தெரிவிக்கப்பட்டது .‌ அதன்படி சீன நிறுவனமான ஹுவாய் நிறுவனத்திற்கு ‌அமெரிக்க தொழில்நுட்ப பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

 

Join our channel google news Youtube