இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும் -கனட பிரதமரிடம் பிரதமர் மோடி உறுதி

கனடாவின் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று  கனடா பிரதமரிடம் இந்திய பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ,இந்தியாவிலிருந்து,கொரோனா தடுப்பு மருந்துகள் கனடாவுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம்  கோரிக்கை வைத்தார். ஏற்கனவே பல நாடுகளுக்கு உதவி செய்தது போலவே, கனடாவின் தடுப்பூசிப் பணிகளுக்கும், இந்தியா அனைத்து வித உதவிகளையும் செய்யும் என்று பிரதமர் மோடி , கனடப் பிரதமரிடம் உறுதியளித்தார்.

கொரோனாவை உலகம் வெற்றிகரமாக சமாளிக்குமானால், அதில் கணிசமான பங்கு, இந்தியாவின் அளப்பரிய மருந்துப் பொருள் உற்பத்திக்கும், இந்த உற்பத்தித் திறனை உலகத்துடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடியின் தலைமைத்துவத்துக்கும் தான் உள்ளது என்று பிரதமர் ட்ரூடோ பாராட்டியுள்ளார்.