வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களுக்குள் செல்லும் லாரிகள்…! தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்…!

வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களுக்குள் செல்லும் லாரிகள்…! தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்…!

வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் செல்வது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், திமுக நிர்வாகிகள் புகார். 

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே.2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் செல்வது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவிடம், திமுக நிர்வாகிகள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, பொன்முடி ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்.

அதன் இந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது. எப்போதும் போல நடவடிக்கை எடுக்கிறேன் என்று சத்தியபிரதா சாஹு கூறியுள்ளார். 2 நாட்களில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால் அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றும், வாக்கு என்னும் மையங்களில் தேவையான அளவு கழிப்பறை இருக்கும் நிலையில், லாரிகளில் மொபைல் கழிப்பறைக்கு என்ன அவசியம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube