மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில்..!! சித்திரை தேர் திருவிழா தொடங்கியது..!!

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 19-ந்தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது.

பின்னர் இரவு சுவாமி அம்பாள் கேடயத்தில் புறப்பாடு நடைபெற்றது. 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை)இரவு சுவாமி கற்பகத்தரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 22-ந் தேதி மற்றும் 23-ந்தேதி சுவாமி வாகங்களில் புறப்பாடு நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment