கொரோனாவால் குஷ்புவிற்கு நேர்ந்த சோகம்.!

கொரோனாவால் குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமானார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலு‌ம் சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதனால் பல சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் குஷ்புவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.