தனது திருமணம் மற்றும் வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த திரிஷா .!

தன்னை குறித்து நன்றாக புரிந்தவரை மட்டுமே தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.

நடிகை , நடிகர்களின் திருமணம் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளியாகுவது வழக்கம் . அந்த வகையில் நடிகை திரிஷாவிற்கு 2015-ம் ஆண்டுபிரபல தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு , அது நிச்சயதார்த்தம் வரை சென்று ஐந்து மாதங்களுக்கு பின் இருவரும் பிரிந்து விட்டனர்.

அதனையடுத்து தெலுங்கு நடிகரான ராணாவை காதல் செய்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறப்பட்டது . ஆனால் இருவரும் ஒரு சில காரணங்களால் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது

இந்நிலையில் தற்போது திரிஷா தனது வருங்கால கணவர் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், எனது திருமணம் குறித்து முன்பே முடிவு செய்ததை தான் கூறுவதாகவும், என்னை பற்றி முழுமையாக புரிந்து கொண்டவரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், அது கண்டிப்பாக காதல் திருமணமாக தான் இருக்கும் என்றும் கூறினார். அப்படி தன்னை நன்றாக புரிந்து கொண்ட ஒருவரை சந்திக்கும்போது தனது திருமணம் நடக்கும். அதுவரை, நான் சிங்கிள் தான். அதை பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால் இப்படியே இருந்து விடுவேன்.

தனிமையில் இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார். இவரது நடிப்பில் ராங்கி மற்றும் ஷுகர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. அதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment