காங்கிரஸ் அழைப்பை நிராகரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ்..!

அனைத்து எதிர்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி விடுத்த அழைப்பை திரிணாமுல் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே நாளை பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி நாளை காங்கிரஸ் ஆலோசனை நடத்துகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்க வாய்ப்பில்லை பல மாநிலங்களில் கட்சி பிளவுகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களுடன் போராடி வரும் காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை வழிநடத்தி ஒருங்கிணைக்கும் நிலையில் இல்லை.

காங்கிரஸ் கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம். காங்கிரஸ் தலைவர்கள் முதலில் அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தட்டும். பிறகு மற்றவர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்யுங்கள். பாஜவை எதிர்ப்பதில் காங்கிரஸ் தலைவர்களுக்கு போதுமான உறுதி இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மழைக்கால கூட்டத் தொடரில் பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய  அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து கடும் நெருக்கடி கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan