விமானம் விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி உயிரிழப்பு..!

உத்தரபிரதேசத்தின் அசாம்கரில் இன்று  நான்கு இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு இளம் பயிற்சி விமானிஉயிரிழந்தார். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சிறிய விமானம் காலை 11.30 மணியளவில் ஒரு விவசாய நிலத்தில் மோதியது என்று அசாம்கார் மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

விமானம் ஒரு பயிற்சி நிறுவனத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் புறப்பட்டது. அது ஒரு பயிற்சி விமானியால் இயக்கப்பட்டதும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானி ஹரியானாவில் உள்ள பால்வாலில் வசிக்கும் கோனார்க் சரண் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பயிற்சி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சரனுக்கு 125 மணிநேர பறக்கும் அனுபவம் இருந்தது. இதில் 52 மணி நேர தனியாக பறந்துள்ளார். அவர் ஒரு சிறந்த பயிற்சி விமானியாக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan