இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி….. விவசாயிகள் பயனடைந்தனர்….!!

நெற்பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி என்றும் , இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தையடுத்து  கீழ்பவானி வாய்கால் பாசன பகுதியில், விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல்சாகுபடியில் செய்து வருகின்றனர். தற்போது குளிர்காலம் என்பதால் நெற்பயிர்களை பூச்சி தாக்கும் .இநிலையில் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எப்படி பாதுகாப்பது குறித்து, விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் கடுக்காம்பாளையம், கோரக்காட்டுர், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் அதிகமான  கிராமங்க  விவசாயிகள் கலந்து கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment