இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.!

புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

புதிதாக அரசு பணியில் சேரும் அரசு பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் கடந்த மாதம் 7-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.

இதன் மூலம் பவானிசாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு, தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிகாண பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி என தமிழ்நாடு மனிதவள மேலாண்மை (பயிற்சி-1) துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.

report

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்