புதிதாக 68 சிறப்பு ரெயில்கள்.. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு..

  • தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு.
  • புதிதாக 68 சிறப்பு ரயில்கள் இயக்கம்.
     சென்னை முதல்  கோவை மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 68 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரெயில்வே தற்போது அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை முதல் கோவை இடையே 2 குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகளுடன் கூடிய சிறப்பு ரெயில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Image result for southern railway
இந்த புதிய ரயில்கள் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக  தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் காலை 5 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் என்றும், மதியம் 12.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடையும் என்றும், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மீண்டும்  2 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 9.45 மணிக்கு கோவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிறப்பு ரயில் வரவு மக்களை சிரமத்திலிருந்து ஓரளவு திருப்திபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கருதுகின்றனர்.
author avatar
Kaliraj