டெல்லியில் இந்தியா கேட் அருகே டிராக்டர் எரிக்கப்பட்டது .
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களும் ஜனாதிபதியின் ஓப்புதல் வழங்கிய உள்ளார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் ஒரு டிராக்டர் எரிக்கப்பட்டது.
இந்தியா கேட்டில் டிராக்டர் எரிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். இவர்கள் அனைவருமே பஞ்சாபில் வசிப்பவர்கள் எனவும், டொயோட்டா இன்னோவா காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காலை 7.42 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 15முதல் 20 பேர் இந்தியா கேட் முன் கூடி ஒரு டிராக்டருக்கு தீ வைக்க வைத்தாகவும், தீ அணைக்கப்பட்டு ஒரு டிராக்டரும் அகற்றப்பட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
“ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற முழக்கங்களையும் எழுப்பினர் எனவும் காலை 7.15-7.30 மணியளவில் துணை போலீஸ் கமிஷனர் ஈஷ் சிங்கால் தெரிவித்தார்.
Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின்…
RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக்…
Air conditioner- குழந்தைகளுக்கு ஏசி பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம். கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை போக்கவும், வெப்ப காற்றில் இருந்து …
M.G.Ramachandran : பிரபல நடிகை ஒருவர் செய்த விஷயம் எம்.ஜி.ஆரை ரொம்பவே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய படங்களின்…
X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின்…
Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…