நீலகிரியில் 9 ஆம் தேதி முதல் திறக்கப்படும் சுற்றுலாத்தலங்கள்!

நீலகிரியில் வருகிற 9 ஆம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்படுகிறது.

தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸ் ஊடகங்கால் கடந்த பல மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்து, சுற்றுலா தளங்கள் என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்பொழுது தான் தமிழகத்தில் அரசு சில தளர்வுகளை மக்களுக்கு அறிவித்து வருகிறது.

இதில் ஒன்றாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் வருகிற 9 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு என தனி பாஸ் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal