மீனவர்கள் கையில் சிக்கிய திமிங்கலத்தின் வாந்தி! அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Published by
லீனா

தாய்லாந்தை சேர்ந்த நரிஸ் சுவான்சாங் என்ற மீனவர், கடற்கரைக்கு அருகில் திமிங்கலத்தின் வாந்தியை கண்டுபிடித்துள்ளார். அதன் மதிப்பு ரூ.25 கோடியாம்.

வாந்தி என்றாலே நாம் அனைவரும் அருவருக்க கூடிய  விஷயம். ஆனால், ஒரு மீனவரின் கையில் சிக்கிய வாந்தி அவரை கோடீஸ்வரராக்கியுள்ளது. மாதத்திற்கு 500 பவுண்டுகள் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு நபர், தான் கையில் கிடைத்த  சாதாரணமான பாறை போன்ற ஒரு பொருளால் கோடீஸ்வரராகுவோம் என நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

அம்பர்கிரிஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் வாந்தியானது, மிகவும் விலைமதிப்புள்ள ஒரு பொருளாக கருதப்படுகிறது. பாறை போன்ற இந்த பொருளானது, கடலின் புதையலாக கருதப்படுகின்ற  நிலையில், தங்கம் மற்றும் வைரம் போன்ற விலைமதிப்புள்ள பொருளாக கருதப்படுகிறது.

இந்நிலையில்,  தாய்லாந்தை சேர்ந்த நரிஸ் சுவான்சாங் என்ற மீனவர், கடற்கரைக்கு அருகில் இருந்த பாறை போன்ற ஒரு துண்டை கண்டுபிடித்தார். முதலில்  அது என்ன பொருள் என தெரியாத  நிலையில், பின்பு அதை ஆராய்ந்த  போது,ஏதோ விலைமதிப்புள்ள பொருள் என்பதை உணர்ந்து கொண்டார். அதன்பின், அது திமிங்கலத்தின் வாந்தி என அவர் புரிந்து கொண்டார்.

இதுவரை கிடைத்த அம்பெர்கிரிஸ் 100 கிலோ எடை கொண்டது ஆகும். இதுகுறித்து அவர் கூறுகையில், அம்பர்கிரிஸின் தரத்தை அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இது கிலோவுக்கு 23,740 விலை கிடைக்கு என கூறியுள்ளார். மேலும், இதனை ஆய்வு செய்யும் நிபுணர்களுக்காக காத்திருப்பதாகவும், இது மிகவும் விலைமதிப்பு மிக்க பொருள் என்பதால், திருட்டு அபாயம் அதிகமாக உள்ள காரணத்தால், போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த வாந்தியின் மதிப்பானது ரூ.25 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

5 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

7 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

7 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

9 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

10 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

10 hours ago