இந்தியாவிற்கு 100 மில்லியன் டாலருக்கு அதிகமான மருத்துவ உபகரணங்கள் – அமெரிக்கா

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்காக 100 மில்லியன் டாலருக்கு அதிகமான மருத்துவ பொருட்களை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவலால் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பாதிக்கப்படுகிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை அதிரிப்பதால் மருத்துவம் சார்ந்த ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என பல்வேறு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் பல கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவுதாக தெரிவித்துள்ளது.

அந்த வகையில், ஆரம்பத்தில் கொரோனாவால் கடுமையான இழப்பை சந்தித்த அமெரிக்காவுக்கு உதவியது. தற்போது. இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். அதன்படி, கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு அமெரிக்கா 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான பொருட்களை அனுப்புவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த பொருட்களில் 1,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 15 மில்லியன் என் 95 மாஸ்க் மற்றும் 1 மில்லியன் ரேபிட் கிட் அனுப்புவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது சொந்த ஆஸ்ட்ராஜெனெகா உற்பத்தி பொருட்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது. இது 20 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை தயாரிக்க பயன்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் ஆரம்ப காலத்தில் அமரிக்கா சிரமப்பட்டபோது இந்தியா, உதவி செய்தது போல, இந்தியாவுக்கு தேவைப்படும் நேரத்தில் உதவ அமெரிக்கா உறுதியுடன் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

5 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

6 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

11 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

22 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

1 day ago