நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை சுனைனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து வீட்டில் தனிமை படுத்திக்கொண்டார். கொரோனா தொற்று உறுதியானதை தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளது ” நான் மிகவும் கவனமாக இருந்தேன், ஆனாலும், எனக்கு கொரோனா பாதிப்புக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். எனது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் தனிமையில் உள்ளனர். தயவுசெய்து முகமூடி அணிந்து, வீட்டிலேயே இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…