நாட்டையே உலுக்கிய 2ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை!
2ஜி வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை * டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு * 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு..
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார் . அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவுசெய்து விசாரித்தது. இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி-யுமான கனிமொழி ஆகியோர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2ஜி வழக்கு தொடர்பான வாதங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. நாட்டையே உலுக்கிய இவ்வழக்கு, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டுவந்த இவ்வழக்கின் தீர்ப்பு நாள், இன்று வெளியானது .
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதை அடுத்து குற்றம்ச்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
source: dinasuvadu.com