ஈரான் மீது பொருளாதார தடை..அமெரிக்க டிரம்ப் அதிரடி..!
ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளும் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தீவிரமாக அமலுக்கு வந்து விடும் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாக கூறி அமெரிக்கா சில மாதங்களுக்கு முன் அதிலிருந்து விலகியது.
இதனைதொடர்ந்து, விலக்கி கொள்ளப்பட்ட பொருளாதார தடைகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் நிறுத்த வேண்டும் என்றும் அப்படி செய்யாவிட்டால் அந்த நாடுகளும் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது வரும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளும் மீண்டும் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் தீவிரமாக அமலுக்கு வந்து விடும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
dinasuvadu.com