” நாளை ஜாமீன் நடிகர் கருணாஸ்க்கு” வழக்கறிஞ்ர் ராஜா..!!

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.இந்நிலையில் நீதிபதி விசாரனைகளை முடிந்து விட்டு நடிகரும் ,சட்டமன்ற உறுப்பினருமமான கருணாஸ்க்கு வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து கருணாஸ் வழக்கறிஞ்ர் ராஜா செய்தியாளர்களிடம் கூறும் போது நடிகர் கருணாஸ் மீது போடப்பட்ட வழக்கு பிரிவில் கொலை முயற்சி பிரிவு ரத்து செய்யப்பட்டது.அதை தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு நடிகர் கருணாஸ்க்கு ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என நடிகர் கருணாஸ் தரப்பு  வழக்கறிஞ்ர் ராஜா தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
Dinasuvadu desk

Leave a Comment