டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா போராடி தோல்வி …!

அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா வீரர் பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

பின்னர், காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் ஈரான் வீரர் மோர்டஸாவை வீழ்த்தி  பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் அலியோ ஹஜியுடன் மோதினார். அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

அரையிறுதி போட்டியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை பஜ்ரங் புனியா மோதவுள்ளார்.

author avatar
murugan